நான் பேசும் சினிமா (Filmme talkies)
நான் பேசும் சினிமா (Filmme Talkies) சினிமா என்ற மூன்றெழுத்து மந்திரச்சொல் எத்தனை எத்தனை விசயங்களை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவோ மாற்றங்களை நமக்குள் விதைத்திருக்கிறது.பல நாயகர்களையும் தேவதைகளையும் நமது மனதில் கலந்து வாழச்செய்கிறது இந்த சினிமா.. சினிமா ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.. சினிமா நம் இரு புலன்களின் வழியாக உள்ளே சென்று இரத்த அணுக்களின் இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தையும் மூளையையும் புத்துணர்ச்சிப் பெற செய்து ஐம்புலன்களையும் இன்புறச்செய்து நம்மை தம் வச படுத்திக்கொள்வதே சினிமாவின் பிரதான வேலை. சினிமா ஏற்படுத்தும் இரசாயன மாற்றத்தின் விளைவாக தான் அன்பு, பாசம், நட்பு, காதல், காமம்,வீரம், அரசியல், புரட்சி,மாற்று சிந்தனை போன்ற பல உணர்வுகள் தூண்டப் படவும் புத்துணர்ச்சிப் பெறவும் செய்கிறது.. சினிமா பலபரிணாம வளர்ச்சிகளைப் பெற்று தன்னைத் தானே செதுக்கிக் கொண்டும் பல உருவங்களின் வழியாக நம்மை வந்து அடைந்த